பெந்தோட்டை கடற்கரையின் அழகை ரசிப்பதுடன், நீர் விளையாட்டு ஆர்வலர்களுக்கு பெந்தோட்டை கடற்கரை சிறந்த இடமாகும். ஸ்நோர்கெலிங், ஸ்கூபா டைவிங், ஜெட் ஸ்கீயிங், விண்ட்-சர்ஃபிங், வாட்டர் ஸ்கீயிங் போன்ற பல செயல்களில் ஈடுபடும் திறன் அவர்களுக்கு உண்டு. அதன் மூலம் பெரிய உத்வேகத்தைப் பெறலாம். ஆழ்கடலில் மீன்பிடிக்கவும், ஆழமற்ற கடலில் நீந்தவும் முடியும். எனினும் ஆபத்தான இடங்களில் சிவப்புக் கொடிகள் காணப்படுவதாலும், உயிர்காக்கும் குழுக்கள் இருப்பதாலும் பார்வையாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.






